Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>

A degree is enough..!

ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்..! விமானப்படையில் பெரிய சம்பளத்தில் வேலை! 317 காலி பணியிடங்கள்! உடனே முந்துங்கள்

இந்திய விமானப்படையில் காலியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிபுரிய தகுதியும் ஆர்வமும் உள்ள இரு பாலர்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்பம் உள்ளவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பு AFCATக்கான 2ம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். மொத்தம் 317 இடங்கள் காலி பணியிடங்கள் உள்ளன. விமானப் படையில் வேலை பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணியிடங்களின் விவரம்;-

AFCAT Entry

காலியிடங்களின் எண்ணிக்கை: 317

பிளையிங் – 38 (ஆண்கள் - 28, பெண்கள் - 10)

கிரவுண்ட் டியூட்டி (Technical) – 165 (ஆண்கள் - 149, பெண்கள் - 16)

கிரவுண்ட் டியூட்டி (Non-Technical) – 114 (ஆண்கள் - 98, பெண்கள் - 16)

வயது வரம்பு:

பிளையிங் பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற பணியிடங்களுக்கு 20 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.

கிரவுண்ட் டியூட்டி (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு careerindianairforce  or afcat.cdac.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

30.12.2023

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

81000 monthly salary after 12th standard...Apply immediately in NCDIR..!!

12 ம் வகுப்பு படித்தாலே ரூ81000 மாத சம்பளம்... NCDIR ல் உடனே விண்ணப்பியுங்க.. !!

இந்திய நடுநிலை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையமானது Lower Division Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஒன்றிய அரசு பணிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 28-11-2023 முதல் 29-12-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: LOWER & UPPER DIVISION CLERK & STENOGRAPHER (Group-C – Ministerial)

காலிப்பணியிடங்கள்: 7 (Lower Division Clerk  - 2, Upper Division Clerk  - 2, Stenogrpher - 3)

 

கல்வி தகுதி:

Lower Division Clerk - அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Upper Division Clerk - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Stenogrpher - கணினி கல்வியறிவுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 - 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பளம்:

Lower Division Clerk - ரூ. 19,900 - 63,200
Upper Division Clerk - ரூ. 25,500 - 81,100
Stenogrpher - ரூ. 25,500-81,100

 

தேர்வு செயல் முறை:

Computer Based Test, Skill Test

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.ncdirindia.org/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28-11-2023 முதல் 29-12-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2023

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

TNPSC Annual Exam Time Table 2024 – December 15 Release!

TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2024 – டிசம்பர் 15 ம் தேதி வெளியீடு!

TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2024 – டிசம்பர் 15 ம் தேதி வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 2024 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே காண்போம்.

TNPSC Annual Planner 2024:

தமிழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் வருடம் தோறும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிறுவப்பட்டு வருகிறது. அதே போல் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் குரூப் 1, குரூSlow Laerப் 2, குரூப் 4 போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தற்போது தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் 30 வகையான தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளது.

 

வருடாந்திர தேர்வு அட்டவணையின் போதே, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பும் சென்ற வருடத்தில் இருந்து அறிவிக்கப்பட்டது. அதே போல் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் தேர்வு அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு நடைபெறும் நாள் போன்ற அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Tamil Nadu Govt Jobs at Rs 62,000 Salary: Who Can Apply?

ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வியாழக்கிழமை(டிச.21) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் அடங்கிய 4 ஜீப்பு ஓட்டுநர் பணிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பம் வியாழக்கிழமை(டிச.21) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜீப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்போர் 1.7.2023 அன்றுள்ளபடி மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆதிதிராவிடர் ஆகியோர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.  

 

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ஊதியமாக ரூ.19,500 - 62,000 மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் படி தமிழக அரசால் வழங்கப்பட்ட தகுதியான எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பங்களை https://dharmapuri.nic.in இணையதளம் அல்லது தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய www.ncs.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 13.11.2023 முதல் 21.11.2023 தேதி மாலை 5.45 -க்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு), இரண்டாவது தளம், தருமபுரி 636 705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். 

 

கூடுதல், விவரங்களுக்கு https://dharmapuri.nic.in இணையத்த்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Tamil Nadu Government Job;

தமிழக அரசு வேலை; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நிரந்தர முழுநேரக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 15,700 – 58,100

தூய்மைப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 15,700 – 58,100

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : இயக்குநர், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600006

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

JACKPOT JOB IN PRIVATE AIRLINES - DON'T MISS APPLY!

தனியார் விமான சேவை நிறுவனத்தில் ஜாக்பாட் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தனியார் விமான சேவை நிறுவனத்தில் ஜாக்பாட் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தனியார் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான Indigo தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Assistant Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Indigo காலியிடங்கள்:

Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

Assistant Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Assistant Manager முன்னனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Assistant Manager சம்பளம்:

Assistant Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Indigo நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

 

Indigo தேர்வு முறை:

இந்த Indigo நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo விண்ணப்பிக்கும் முறை:

Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

40+ Vacancies for SBI SCO Job – Salary: 78,230/- ||

SBI SCO பணிக்கு 40+ காலியிடங்கள் – சம்பளம்: 78,230/- || நேர்காணல் மட்டுமே!!

SBI SCO பணிக்கு 40+ காலியிடங்கள் – சம்பளம்: 78,230/- || நேர்காணல் மட்டுமே!

State Bank of India (SBI Bank) வங்கியில் SCO பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரிவின் கீழ் Manager / Deputy Manager (Security) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

SBI SCO 2023 வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Manager / Deputy Manager (Security) பணிக்கு என 42 பணியிடங்கள் SBI வங்கியில் காலியாக உள்ளது.
  • 01.04.2023 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இந்த SBI வங்கி சார்ந்த பணிக்கு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை போன்றவற்றில் Assistant Superintendent, Deputy Superintendent, Assistant Commandant, Deputy Commandant of Indian Police ஆகிய பதவிகளில் 05 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை சேவை செய்தவராக இருக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.48,170/- முதல் ரூ.78,230/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • Shortlisting, Interview / Interaction மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

SBI SCO 2023 விண்ணப்பிக்கும் முறை:

இந்த SBI வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (27.11.2023) கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Exciting job opportunity in railway sector with stipend of Rs.9,000... Do you know how to apply?

ரயில்வே துறையில் ரூ.9,000 உதவித்தொகையுடன் அட்டகாசமான வேலை வாய்ப்பு... விண்ணப்பிக்கும் முறை எப்படி தெரியுமா?

இந்திய ரயில்வே நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் கொங்கன் ரயில்வே. அனைத்து மண்டலங்களுக்கும் இடையில் சேவை வழங்கும் பொதுவான ரயில்வே அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு கொங்கன் ரயில் நிறுவனம் இயங்கி வருகிறது. 

 

கொங்கன் ரயில்வே நிறுவனத்தில் Trainee Apprentices பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்திய ரயில்வே நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் கொங்கன் ரயில்வே. அனைத்து மண்டலங்களுக்கும் இடையில் சேவை வழங்கும் பொதுவான ரயில்வே அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு கொங்கன் ரயில் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில், பயிற்சி அப்ரண்டிஸ்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. 

இதில், இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பக்கிலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம்:    

கொங்கன் ரயில்வே

பணியின் பெயர்:    

பயிற்சி அப்ரண்டிஸ்கள்

பணியிடங்கள்:    

190

விண்ணப்பிக்க கடைசி தேதி:    

10.12.2023

விண்ணப்பிக்கும் முறை:    

ஆன்லைன்

ரயில்வே காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Trainee Apprentices பணிக்கு மொத்தம் 190 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பொறியியலில் பட்டப்படிப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்/எஸ்டி/ பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் 27 வயது இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Graduate Apprentices – ரூ.9000/-

Technician (Diploma) Apprentices – ரூ.8000/-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

NABCONS NABARD Recruitment 2023 – Rs.

NABCONS நபார்டு வேலைவாய்ப்பு 2023 – ரூ. 87,500/- ஊதியம் || தேர்வு கிடையாது!

NABCONS நபார்டு வேலைவாய்ப்பு 2023 – ரூ. 87,500/- ஊதியம் || தேர்வு கிடையாது!

நபார்டு ஆலோசனை சேவைகள் (NABCONS) ஆனது State Coordinator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 09.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NABCONS காலிப்பணியிடங்கள்:

State Coordinator பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBA/MSW/Rural Development, Development Studies, Social Science, or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Coordinator வயது வரம்பு:

01.11.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

 

சம்பளம் விவரம்:

State Coordinator பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 87,500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்புகளைக் கிளிக் செய்து அதில் உள்ள விவரங்களை நிரப்புவதன் மூலம் 03 நவம்பர் 2023 முதல் 09 நவம்பர் 2023 வரை 07 நாட்களுக்குள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

55,000/- per month job in Tamil Nadu Government Office – Apply and Buy!

தமிழக அரசு அலுவலகத்தில் மாதம் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசு அலுவலகத்தில் மாதம் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருச்சுளி பிளாக் அலுவலகத்தில் Aspirational Block Fellow பணியிடங்களை ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவி முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது. எனவே தகுதியானவர்கள் இப்பணிக்கு 15.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

Aspirational Block Fellow பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

Fellow வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும். தரவு பகுப்பாய்வு பற்றி தெரிந்திருக்க வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் அல்லது குரூப் I தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Aspirational Block Fellow தேர்வு செயல் முறை:

1. Short Listing

2. Interview

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.55,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

உரிய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்ட விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம், மேம்பாட்டுப் பிரிவு, விருதுநகர் (கீழே உள்ள முகவரி) என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ 15 நவம்பர், 2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சென்றடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 27 )   NEXT |  LAST